Thursday, October 7, 2010

இப்படி இருக்கத்தான்....

அதிகாலை.

ஆற்றுப் படித்துறையில் நல்ல கூட்டம்.

எல்லோருக்கும் உற்சாக குளியல்.

அப்பொழுது ஆற்று நீரில் ஒரு தேள் உயிருக்குப் போராடியபடி மிதந்து வருகிறது. குளித்துக் கொண்டிருந்தவர்களில் இருந்த ஒரு சந்நியாசி அந்தத் தேளைப் பார்த்தவுடன் அதைக் காப்பாற்ற கைகளில் ஏந்துகிறார். அடுத்த விநாடி தேள் அவரைக் கொட்டிவிட,  தேள் ஆற்றில் விழுந்துவிடுகிறது.

வலியைப் பொறுத்தபடி மீண்டும் அதைக் காப்பாற்ற சந்நியாசி முயற்சிக்க, வேடிக்கை பார்த்த அனைவரும் "தேளைத் தொட்டால் கொட்டும் என்பது கூட தெரியாத சந்நியாசி, சந்நியாசத்தில் என்ன தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்" என்று பரிகாசம் செய்கின்றனர்.

சிறிய போராட்டத்திற்குப் பின் தேளை கரையில் சேர்க்கும் சந்நியாசி கூட்டத்தினரைப் பார்த்து, "யார் தொட்டாலும் கொட்டுவது தேளின் குணம். தத்தளிக்கும் யாருக்கும் உதவுவது மனிதனின் குணம். நான் அதைத்தான் செய்தேன்"என்று கூறிச் சென்றார்.

இப்படி இ ரு க் க த் தா ன்........

No comments:

Post a Comment