Monday, October 18, 2010

பாவமில்லை....

கண்ணோடு கண் பேசல்..
விரல் நகம் தொடல்...
விரல் பிரித்து ரேகை தேடல்...
கைவளை எண்ணுதல்...
மணிக் கரம் பற்றுதல்....
பூச் சூடுதல்...
குழி விழும் கண்ணத்தை குழைவாய் வருடுதல்...
பாதத்தின் மேல் பாதம் பதித்தல்...
விரிந்த கூந்தலில் விரல் நுழைத்தல்...
மூச்சுக் காற்றுரச காதில் இரகசியம் பேசுதல்...
இதழோடு இதழ் பதித்தல்.....
இறுக்கி அணைத்தல்....
ஊக்கு விலக்குதல்....
இவை எதுவும் பாவமில்லை...
தாய்க்கு மகளிடமும்,
கணவனுக்கு மனைவியிடமும்.

No comments:

Post a Comment